Powered By Blogger

Monday 12 August 2013

இந்த திருவிழா தெரியுமா?

            இந்த திருவிழா தெரியுமா?


Photo     
Photo                                                                                   இந்த படங்கள் மணப்பாறை பேருந்து நிலையத்தில் எடுக்க பட்டவை..............................................................................................................................................................................               .வீ. பொன் திரு .







Monday 5 August 2013

காய்ச்சலும் பொதிகைமலையும்

காய்ச்சலும் பொதிகைமலையும்

ஸ்பிக் நகர்- வீட்டிற்குள் அப்பா நுழையும் போதே சோம்ஸ் சோம்ஸ் என்று அழைத்தவாறே வந்தார்.

அம்மாவின் குரல், "இன்னும் அவனுக்கு காய்ச்சல் விட்டபாடில்லை, உள்ள படுதிருக்கான்" என்றது.

"ஆஸ்பதிரிக்கு கூப்பிட்டு போனியா. பிளட் ரிசல்ட் வந்ததா" இது அப்பா

"வந்ததுங்க டைப்பாய்டு இல்லையாம் என்னணு அவருக்கும் புரியலை. மதுரைக்கு எழுதிதரேன் போயி பாருங்க-நு சொல்றாருங்க"

அம்மா சொல்லும்போதே சோம்ஸ் பெட்ரூமிலிருந்து சோர்வாய் வெளியே வந்தான் அவனுக்கு ஒரு வாரமாய் கடும் ஜுரம் மதியம் வரை உடல் நன்றாக இருக்கிறது. அதன் பின் வரும் ஜுரம் காலை வரை படுத்தி எடுக்கிறது.

மருந்து கடையில் மாத்திரையில் ஆரம்பித்து ஸ்பிக் நகர் டாக்டரிடம் ஊசி போட்டு முடியாமல், தூத்துக்குடி டவுன் டாக்டர் வரைக்கும் போயி ரத்தம் வரை பார்த்தாச்சு, ம்ம்‌ம்.. இப்ப மதுரை வரைக்கும், என்ற ஆயாசம் அவன் கண்களில் தெரிந்தது.

கீழ் வரிசையில் உள்ள தெத்துபல் தெரிய அழகாய் சிரிக்கும் சோம்ஸின் முக வாட்டத்தை பார்த்த அவன் அப்பா மதுரைக்கு எல்லாம் வேண்டாம். நம்ம பலவேசத்தின் சித்தப்பா தென்காசியில் இருக்கிறார் அவரை பார்த்து வருவோம் என சொல்ல தென்காசிக்கு பயணம் தயாரானது.

அடுத்த நாள் தென்காசி சன்னதி தெருவில் சோம்ஸும் அவன் அப்பாவும்,

திண்ணையில் தாயம் விளையாடி கொண்டிருந்த கும்பலிடம் அவர் விலாசத்தை இவர்கள் விசாரிக்க,

இவர்களை  திரும்பி பார்த்த ஒருவன்
"அவரு வேலை செய்வது என்னவோ அரசாங்கத்தில் தான் ஆனா அப்ப அப்ப பொதிகை மலை ஏறிடுவார். ஏறினா இறங்க மாதம் ஒன்னோ ரண்டோ ஆகும்" என்றான்.

சோம்ஸு ஒருவித பார்வையாய் அவன் அப்பாவை பார்க்க,

கட்டையை உருட்டியவன் உருட்டிய கையோடு நிமிர்ந்து இவர்களை பார்த்து

"இல்ல இல்ல அவரு வீட்டில தான் இருக்கார், அதோ பாருங்க அந்த நாலாவத இல்ல ஒரு வீடு அது தான்" என்றான்.

இவர்கள் வீட்டை பார்த்து நடக்க விளையாடி கொண்டு இருந்தவர்கள் ஏதோ பேசி சிரிப்பது இவர்கள் காதில் விழுந்தது. சோம்ஸ் அவனை அறியாமல் அவர்களை திரும்பி பார்த்தான்.

சிறிய வீடு ஆனால் நேர்த்தியா இருந்தது அப்பாவும் அவரும் பேசி கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் இருவருக்கும் மோர் கொண்டு வந்து கொடுத்தார்.

மோரை குடித்த படி ஜூரத்தினால் உண்டான ஆயசத்துடன் அப்பாவையும் அவரையும் மாறி மாறி சோம்ஸ் பார்த்தான். அவன் பார்வை அப்பாவை தவிர்த்து அவர் மேலயே படிந்தது.

நல்ல ஒடிசலான தேகம், மேலாடை போடவில்லை, வயிறு உள்வாங்கியிருந்தது, இடுப்பில் காவி வேட்டி, மழிக்க பட்ட முகம். வயது ஒரு நாற்பத்தி ஐந்து இருக்கும், நெற்றியில் மஞ்சளும் குங்கமமும் கலந்த கலவை போல் ஏதோ தீட்டி இருந்தார். கண்கள் பிரகாசித்தது இல்லை ஜொலித்து கொண்டு இருந்தது அவர் கண்களை பார்க்க பார்க்க சோம்ஸுக்கு உடல் சிலிர்த்தது.

இவன் பார்த்ததை அவர் உணர்ந்த மாதிரி சடாரென்று திரும்பி இவனை பார்த்தார். அந்த பார்வை அவனை ஊடுருவிய மாதிரி இருந்தது.

அவர் அப்பாவை பார்த்து அருகில் உள்ள சேரில் அமர சொன்னார்.  இவனை அழைத்து அவர் அருகில்  உள்ள இரும்பு பெஞ்சில் ஒரு பாய் விரித்து இருந்தது அதில் உட்கார சொல்லி வலது கையை நீட்ட சொன்னார்.

அவரின் வலது கை விரல்கள் சோம்ஸின் வலது கை நாடியில் படர்ந்தது. அந்த வினாடி மெலிதான மின்சாரம் பாய்ந்த உணர்வை பெற்ற சோம்ஸ் அவரையே பார்த்தான்.

அவர் கண்கள் மூடி யோசனையில் இருந்தவர் போல இருந்தார். கண்களை திறக்காமல் அவர் "தம்பி உங்கள் இடது கையை ஊணி இருக்கீங்க அதை எடுத்து உங்கள் தொடையில் வையுங்கள்" என்றார்.

அவர் தீண்டலினால் ஏற்பட்ட சுகானுபவத்தில் இருந்து மீளாத சோம்ஸ் அவனை அறியாமல் அவன் கையை நகர்த்தி அவன் தொடையில் வைத்தான்.

கண்ணை திறக்காமல் அவர் அவனிடம் "உங்களுக்கு எப்பவாது பிட்ஸ் வந்து இருக்கா? இது வரைக்கும் உங்களுக்கு இரண்டு முறை வந்திருக்கணுமே?" என கேட்க

அவன் அணிச்சையாக "இல்லை" என்றான்.

"ஆமாங்க, அவன் சிறு பிள்ளையாய் இருக்கும் போது வந்திருக்கு" என அப்பா சொல்ல

அவர் அவன் கையை விடுவித்தார்.

சோம்ஸுக்கு அவன் உடல் இயல்புக்கு வந்தாப்ல இருந்தது. மீண்டும் ஜுரத்தினால் ஏற்பட்ட களைப்பு ஒட்டிக் கொண்டது.

அவர் அப்பாவை பார்த்து "தம்பிக்கு மருந்து கொடுக்கணும்" என்று சொல்லிவிட்டு அவனை ஒரு அறைக்குள் அழைத்து சென்றார்.

சோம்ஸ் அந்த ரூமை பார்த்தான் மிக சிறிய ரூம் அது, அதில் ஒரு ஆஞ்சநயர் சிலை இருந்தது அதன் எதிரே ஒரு மனையும் அருகில் ஒரு மனையும் இருந்தது.  இடமும் அவ்வளவே, அரை முழுக்க ஒரு வித நறுமணம் பரவி இருந்தது.

சிலையின் எதிரே அவரும் பக்கவாட்டில் சோம்ஸும் அமர்ந்தனர். அவர் கண்கள் சிலையின் மீதே இருந்தது. வாய் ஏதோ மந்திரத்தை முணு முணுத்தது, அவர் தொடர அந்த இடத்தில் ஒரு வித அதிர்வை சோம்ஸ் உணர்ந்தான்.

சோம்ஸ் அவரை பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கண்கள் பாதி மூடியும் மூடமாலும் இருந்தது வாய் மந்திரத்தை தொடர்ந்து கொண்டு இருந்தது.

அவர் இருந்த நிலையிலே மாறாமல் அவர் எதிரே இருந்த சிறு பெட்டியை திறந்து ஒரு சிட்டிகை பச்சிலை பவுடர் எடுத்து சோம்ஸிடம் நீட்டினார் அப்போதும் அவர் கண்கள் பாதி மூடிய நிலையில் இருந்ததது

துவர்ப்பும் கசப்பும் கலந்த அந்த பௌடரின் சுவை சோம்ஸின் உச்சியில் உரைத்தது.

அவர் இவன் பக்கம் திரும்பினார் அவரது வலது உள்ளங்கையை அவன் தலையில் வைத்தார்.

சோம்ஸ் அவனை அறியாமல் நிமிர்ந்து உட்கார்ந்தான். அவன் முதுகு தண்டுவடத்தின் அடி பகுதியில் இருந்து ஒரு வித வலியோ உணர்வோ கிளம்பியது போல் இருந்தது அது வேகமாக பரவி உச்சித் தலையில் மோதி கண்களில் மின்னல் வெட்டியது போல் இருந்தது. மூடிய கண்களில் தோன்றிய வெளிச்சத்தில் உணர்வு கலந்தது போல் இருந்தது. அவன் உடல் நடுங்கியது இப்போது ஆழ்ந்த இருட்டு அதில் ஊடுருவி எங்கோ பறப்பது போல் அவனுக்கு இருந்தது இடை விடாத நெடிய பயணம் தூரத்தில் சிறு சிறு வெளிச்ச சிதறல்கள். ஆதியும் அந்தமும் இல்லாத பிரபஞ்சதில் தானும் மிதப்பதாக உணர்ந்தான்.

நீண்ட அமைதி எங்கோ வானத்தில் இருந்து அவர் குரல் கேட்பது போல் இருந்தது.

"நீ ஏதோ பார்த்து பயந்திருக்கே" அவர்

"இல்லை" அவன்

"எனக்கு சரியாக சொல்ல முடியவில்லை உனக்கு தெரிகிறதா என்று பார்" என்றார்

"ஒரு பெரிய பள்ளம் அதன் அடியில் நீர், அந்த பள்ளம் பாதி மூடி உள்ளது. பக்கத்தில் ஒரு ஆலமரம். இந்த இடம் உனக்கு தெரிகிறதா பார்" என்றார்.

இவன் யோசித்து தெரிகிறது "அந்த இடம் என் ஹாஸ்டல் அருகில் உள்ளது" என்றான்.

இப்போது எல்லாம் சரி ஆகி விட்டது என்றார்.

மீண்டும் மௌனம், சிறிது நேரம் கழித்து,  

"காலம் உன்னை என்னிடம் அனுப்பி உள்ளது, என் கூடவே இருக்கிறாயா?" அவர்.

"சரி" அவன்.

"உன் பந்தங்களையும் உறவுகளையும் இப்போதே அறுத்து விடு." அவர்

அவனிடம் நீண்ட மௌனம்.

அவர் கண்களை திறந்து அவனை பார்த்தார்.

அவன் முகம் அஷ்ட கோணலாக மாறிக்கொண்டிருந்தது. எதையோ உணர்வது போல தெரிந்தது.அவர் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

சோம்ஸின் கண்களுக்குள் தெரிந்த நட்சத்திரங்கள் எல்லாம் முகங்களாக மாறின. அப்பா , அம்மா , தம்பி, நண்பர்கள், உறவுகள் என சுழற்றி அடித்தன. அம்மாவும் அப்பாவும் அவன் இரு கண்கள் வழியே புகுந்து அவனுள் கலந்த மாதிரி இருந்தது.

"ஓ" வென்று அலறி எழுந்தான், எழுந்த வேகத்தில் இடது கால் வலது காலை இடர வலப்பக்கமாய் திரும்பி கதவை தள்ளி ஹாலுக்குள் புகுந்து சேரில் உட்கார்ந்து இருந்த அவன் அப்பா காலில் விழுந்தான்.

அப்பா அவனை தூக்கி அணைக்க இவன் அடங்கினான்.

அப்பாவையும் மகனையும் பார்த்த படி ஒரு புன்னகையுடன் பூஜை அறை வாசலில் அவர் நின்றிருந்தார்.

அப்பா அவரை ஏறிட்டு பார்க்க, சோம்ஸ் அவரை பார்க்காமல் தரை பார்த்து நின்றான்.

அவர் புன்னகை மாறாமல் அவனுக்கு எல்லாம் சரி ஆகி விட்டது. இனி அவனுக்கு எப்போதும் காய்ச்சல் வராது என்றார்.

அப்பா சோம்ஸின் உடல் குளிர்ச்சியை உணர்ந்தார்.

சோம்ஸ் நிமிர்ந்து அவரை பார்க்க அவர்

"தம்பி நீங்க இன்று எனக்கு ஒரு பாடம் சொல்லி கொடுத்து இருக்கீங்க. தாய், தந்தை சேவையை விட உலகில் எதுவும் பெரிதில்லை என்பதை எனக்கு புரிய வைத்தற்கு நன்றி , போயி வாங்க" என்றார்

அப்பாவுக்கு ஏதோ புரிந்தது மாதிரியும் இருந்தது புரியாமல் மாதிரியும் இருந்தது. அவரை பார்த்து கை கூப்பி வணங்கி மகனை பெருமையாக பார்த்து தோள் தொட்டு அழைத்து வெளியேறினார்.

அப்பாவும் மகனும் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையம் நோக்கி நடக்க அந்த திண்ணையில் அவர்கள் இன்னும் தாயம் உருட்டிக்கொண்டிருந்தனர். தூரத்தில் தெரிந்த பொதிகை மலை இவர்களை பார்த்து புன்னகைத்த மாதிரி இருந்தது. 

பின்குறிப்பு:
இந்த கதை என் நண்பர் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்ல அதிலிருந்து புனைய பட்டது.     
      

 - வீ பொ திரு

     

Sunday 4 August 2013

மழையும் மாமா நகரமும்


            மழையும் மாமா நகரமும்



என்ன நடக்கிறது ? சென்னையில் நல்ல மழையப்பா!!  அட ஏன் நம்ம சேர்வாஞ்சேரியில் கூட மழையாம் பத்தெரி வரைக்கும் மழை கொட்டுதாம் .நமக்கு மட்டும் ஏன் ??

நம்மை தாண்டி இந்த தங்கபெருமாள் கோவிலில் மழையாம் என்னத்த சொல்றது..

இந்த தண்ணியை நினைத்தாலே தலை சுற்றுகிறது.

பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு போர் வண்டியை கொண்டு வந்து வாஸ்து பார்த்து போர் போடும் போது 120 அடியில் தண்ணி ஆர்டிசியான பாய்ந்த போது வண்டி காரன் 150 க்கும் மேல அமுக்க முடியல செம பிரஷர் போதும் ஸார்.. இனி உங்களுக்கு எப்போதும் தண்ணி பிரச்சினையே வாராது ஸார் நு அவன் சொல்லும் போது ஒரு பெருமையா இருந்தது .

பிறகு நகரின் அபரிமிதன வளர்ச்சி திகைப்பை தந்தது. எங்க பார்தாலும் லோனை விதைத்து காங்க்ரிட் முளைத்து காடுகளாய் படர்ந்தது. சிட்டு குருவிகளின் கூட்டம் போல் மக்கள் கூட்டம் சந்தோஷத்தை தந்தது.

பக்கத்து வீட்டுக்காரர் போர் போட்ட பொழுது 200 அடியில் தண்ணி வந்தது என்று சொல்லும் பொழுது நமக்கு தண்ணி ராசி என்று நினைக்க வைத்தது.

தார் ரோடுகளெல்லாம் சிமெண்ட் ரோடுகளாய் மாறி வழுக்க ஆரம்பித்ததும்..ஏதோ சிங்கபூரில் வாழும் உணர்வு வந்தது. வருபவர்கள் நகரை பார்த்து ஆச்சரியபடும் பொழுது நகரில் வீடு வைத்திருப்பதை நினைத்து பெருமையாக இருந்தது.

கடந்த வருடம் மழை பொய்த போது எதுவும் மாற்றம் தெரியவில்லை. மார்ச் மாத வாக்கில் டீ கடையில் இப்போ எல்லாம் 400 அடி போர் போட்டா..தான் தண்ணீர் வருது என்று மக்கள் பேசும் போது மனம் ஆகா என்றது. ஏப்ரல் மாத வாக்கில்  வீட்டு டேங்க் நிரம்ப அரை மணி நேரத்திற்கு பதிலாக ஒன்னரை மணி நேரம் எடுக்கும் பொழுது மனதில் லேசான பயம் எட்டி பார்த்தது.

சரி சரி விட்ரா போணா தீனா .. நம்ம சம்ப்பை பார்போம். நமக்குதான் நகராட்சியில் இருந்து தண்ணீர் வருதே அப்படினு நினைத்து ஓபன் பண்ணினால் மனம் குளிரும்படி தண்ணீர் சல சலத்தது. கையோட பிளம்பரை அழைத்து மோட்டரை சர்வீஸ் செய்து தண்ணீரை டேங்கில் ஏற்றியதும் நாமெல்லாம் ஆறு???  என்று தோனியது...

மே மாதம் எதிர் பார்த்தது போல போரில் இரண்டு குடம் தண்ணீருக்கு பின்னால் காற்று தான் வந்தது. நமக்கு என்ன ..நாம சம்ப் மோட்டரை போடுவோம் என்று போட்டால் அங்கு ஒரு குடம் தான் .. வேகமாய் போய் திறந்தால் அதுவும் தரையாய் இருந்தது.

அக்கம் பக்கம் விசாரிக்க இப்ப எல்லாம் மூன்று நாளைக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருது அதுவும் ஒரு மணி நேரம் தான்.. ஆனா இந்த தெரு குழாயில் இரண்டு நாளைக்கு ஒரு முறை வரும் பிடித்து கொள்ளுங்கள் சரி தான் ..என்று திரும்பி பார்த்தால் தாம்பரம் ஸ்டேஷனில் பீக் ஹவரில் மின்சார ரயில் டிக்கெட் கியூ போல இருக்க ..

நம்ம அண்ணாச்சிக்கு போன் போட்டா அவரு ஹி  ஹி உனக்கு இப்போ தானா ?? எங்களுக்கு எல்லாம் அப்பமே .. சரி சரி நான் சொல்ற நம்பருக்கு போன போடு என நானும் போன் பண்ணா.. அந்த பக்கம் சார் அட்ரெஸ் சொல்லுங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருப்போம் என்றவுடன் மனதில் ஒரு நம்பிக்கை எழுந்தது.

ஒரு அரை மணி நேரத்திற்குள் ஒரு பையன் வந்து சார் இது தானே இந்த வீட்டு நெம்பர்? ஆமாப்பா!  உங்க பேரு தானே போணா தீனா ??  ஆமமாப்பா என நான் சொல்ல உங்க வீட்டுக்கு வாட்டர் வந்துருக்கு சம்பை காட்டுங்கள் என நான் வெளியே எட்டி பார்த்தால் ஒரு டிராக்டர் அதில் ஒரு குட்டி டேங்கருடன்  உறுமி கொண்டிருந்தது. சரி என்று சம்ப்பை காட்ட திறந்து விட்ட தண்ணீர் பாதி டேங்கர் குறைவதற்குள் சம்ப் வழிய அவன் ஸார் வேறு எங்காவது பிடித்து வைத்து கொள்ளுங்க என்றான் நானோ எனக்கு இது போதும்பா என்றேன் அவனோ இது  உங்களுக்கு வந்த நடை பாதி பிடிதாலும் முழுவதும் பிடிதாலும் எனக்கு 800 ரூவா கொடுக்கணும் ஸார் எங்கவாது பிடிச்சி வைத்துக்கொள்ளுங்கள் என்றான். என்னாது 800 ருவாவா என நான் வாயை பிளக்க அவன் உங்ககிட்ட அண்ணாச்சி சொல்லலையா? என ..

பிறகென்ன எதிர்த்த வீட்டுக்காரரின் சம்பில் மீதிதண்ணியை நிரப்பி விட்டு அவனிடம் பணத்தை அழுதேன். மனம் ஒரு நாளைக்கு 400 ரூவா என்றால் மாதம் 12000 ருவாவா சரிதான் வாங்குற சம்பளத்தை தண்ணீருக்கு கொடுத்து விட்டு அந்த தண்ணீரில் துணியை நனைத்து வயிற்றில் போர்த்தி கொள்ள வேண்டியது தான் கூவியது.

அடுத்த நாளில் இருந்து நானும் என் வீட்டின் உறுப்பினர்களும் தெரு கொழாயின் லைனில் இடம் பிடிக்க குடம் போட்டு காக்கிறோம். அதுவும் பழக பழக பழகிவிட்டது.

ஒரு நாள் இரவு சாப்பாடு முடித்து நானும் அண்ணாச்சியும் தெரு முனையில் உள்ள மூடிய சைக்கிள் கடை வாசலில் உட்கார்ந்து தம் அடிக்கும் பொழுது இந்த தண்ணீரை பற்றி பேச்சு வந்தது. இதுக்கு ஒரு முடிவில்லையா என நான் புலம்ப அவர் கவலைபடாத..  நடக்கிறது அம்மா ஆட்சி கண்டிப்பா மழை கொட்டோ கொட்டுவென்று கொட்டி வெள்ளம் வரும் பாரு எல்லாம்  சரி ஆயிடும் அப்படினு ஒரு போடு போடறார்.

அது சரி இதை படிக்கிற நீங்க சொல்லுங்க அம்மா ஆட்சியில் மழை பெய்து வெள்ளம் வந்து தண்ணீர் பஞ்சமே இருக்காதுங்களா ... பிளீஸ் சொல்லுங்களேன் .....

 

 - வீ பொ திரு