Powered By Blogger

Sunday 12 January 2014

சீத்தாவை தேடி .... ! அவன் ...!

சீத்தாவை தேடி .... ! அவன் ...!


(ஒரு கதை இருவரின் நடையில் .., பிடித்த நடையின் சொந்தகாரரை பின்னூட்டதில் பாரட்டவும்..,)  

"காலை கதிரவன்" கண்சிமிட்டும் முன் எழுந்து, காலை கடன் முடிந்து வேகமாக பள்ளிக்குச் செல்ல ஆயத்தமானன், "காளை", பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி பாலகன், 

அம்மா சாப்பாடு ரெடியா? என்னடா,என்ன அவசரம்?, இன்றைக்கு சீக்கிரம் கிளம்புற? என்றாள் அம்மா,

எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குமா, தோசையை சீக்கிரம் கொடு, இருடா தேங்காய் சட்டினி ரெடி பண்ணிவிட்டு தோசை ஊற்றுகிறேன், வேண்டாம் அம்மா நேராமாயிற்று நேற்று வைத்த பழைய குழம்பை கொடும்மா ..., 

என்ன படிப்போ!! போ,  நாங்கெல்லாம் படிக்கும் போது "10 மணிக்குத்தான்" ஸ்கூலுக்கு போவோம், என்ன ஸ்கூலோ என்ன படிப்போ? என்று முணங்கியவாறு தோசை வார்க்கச் சென்றாள்.., 

காளையின் மனம் சீத்தாவின் நினைப்பில் மூழ்கியது,.., காளையும், கந்தனும் ஒரே பள்ளியில் பயிலும் தோழர்கள், இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் செல்வது வழக்கம்.. 

அந்த ஊரில் இருக்கும் பெரிய வீட்டின் அருகில் இருக்கும் பஸ் ஸ்டாபில் இருந்து பேருந்து மூலம் பக்கத்து ஊர் பள்ளிக்கு செல்வது வழக்கம், சில நாட்களுக்கு முன்பு , காளை சீத்தாவை ஓரக்  கண்ணால் கண்டான்,..., மனம் இறக்கை கட்டி பறந்தது, இலைமறைக் காயாக "சீத்தா" இருக்க , சாலை ஓரத்தில், "நான் இருக்க படைத்தன் பயனை அடைந்தான் இறைவன்", என புதுக்கவிதை புனைந்தது, 

காளையின் மனம் நாட்கள் நகர்ந்தது, காலம் கணிந்தது, சீத்தாவை தாமதக்கும் எண்ணம் பிறந்தது.., 

இந்தா தோசை என்றாள் அம்மா நினைவு களைந்தது, வேகமாக சென்று விட்டு கந்தனுக்கு முன் சென்று சீத்தாவை காணவேண்டும் என்று எண்ணி வேகமாக சாப்பிட்டு முடித்தான் காளை, அம்மா... பாய்!  என்று சொல்லியவாறு வேகமாக நடந்தான். 

வழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் எனக்கு சீத்தா கிடைக்க வேண்டும் என்று வேண்டியவாறு ஓட்டமும் நடையுமாக.., முன்னே சென்ற "மாட்டையும், மாட்டுக்கார வேலணையும்" முந்தியவாறு சென்றான், மெயின் ரோடை அருகில் உள்ள நாயர் டீ ஸ்டாலில் "ஆவதும் பெண்ணால மனிதன் அழிவவதும் பெண்ணால...!" என்ற  பாடல் முணு முணுத்து கொண்டிருந்தது.., 

எதையும் காதில் வாங்கதவானக வேக நடை போட்டு பெரிய வீட்டின் முன் நின்றான், அக்கம் பக்கம் பார்த்தான் மாட்டுக்கார வேலன், வண்டி மாட்டை கையில் பிடித்து வருவது தெரிந்தது, 

அதை பார்த்தவுடன் அவர் வருவதற்குள் நினத்ததை முடிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் "புத்கக பையை" வராவதியில் வைத்து விட்டு, வேகமாய் முன்னேறி அந்த வீட்டின் கேட்டை தாண்டி, கையை தூக்கி ஒரு குதி குதித்து சீத்தாவை தொட்டான்.
குதிக்கும் பொது மேலே போன கால்கள் கீழே வரும் போது “பின்ன” அந்த தார் சாலையில் குப்புற விழுந்தான். மாடு பிடித்து வந்தவர் “டே, டே காளை.. என்ன ஆச்சு?” என்றவாறே ஓடி வந்து அவனை தூக்கி நிறுத்தினார் கீழே விழுந்ததில் “சிராய்ந்த முழங்கையும்” அதில் “வேர்க்கும் இரத்ததை”, அழுகை பொங்கும் கண்களுடன் பார்த்த “அவன்” மீண்டும் சீத்தாவின் நினைப்பு வர அந்த சீத்தா மரத்தை நிமிர்ந்து பார்த்தான் இவன் கைபட்ட வேகத்தில் அந்த சீத்தா பழம் இவன் அருகே கால்வாயில் விழுந்து கிடந்தது.  

                                                  -------ஆக்கம் - கோமதி


சீத்தாவை தேடி .... ! அவன் ...!


அடுப்பு புகை இடம் முழுவதும் பரவி இருந்தது, “அம்மா, என்ன அம்மா?” என்றான் அவன், “நான் என்ன செய்ய? நீ வாங்கி வந்த விறகுதான் பாதி பட்சையா இருக்கு, ஊதி ஊதி மூட்சே முட்டுது, போய் அந்த தட்டிய நல்லா உள்ளே தள்ளி செங்கல் முட்டுகொடு, அப்படியே வெளியே போய் உட்காரு..,” என்றாள் கம்மியும் இருமியும் கண்களை தொடைத்தவாறு அவள் அம்மா.

கண்ணை கசக்கிய படியே, கொடியில் தொங்கிய பேண்டை எடுத்து அதற்க்குள் காலை சொருகி, சட்டயை எடுத்து உதறி உடலில் போர்த்தி பொத்தானை போட்டு, சிதறி கிடந்த புத்தகங்களையும் நோட்டையும் கவரில் போட்டு, கையில் பிடித்து, பேனாவை எடுத்து சட்டையில் சொருகி, தட்டியை இழுத்து கிடைத்த இடைவெளியில் நுழைந்து வெளியே வந்து சைடில் இருந்த அம்மி கல்லின் மீது கவரை வைத்து, உடன் திரும்பி குனிந்து செங்கல்லை எடுத்து தட்டியை உள்பக்கம் தள்ளி முட்டு கொடுத்தான்.பின்னர் அந்த அம்மி கல்லின் மேல் ஓர் ஓரமாய் அமர்ந்தான்.

கீ ...கீ .. சத்தம் வந்த திசையை பார்த்தான், எதிரே இருந்த புளிய மரத்தின் பொந்தில் இருந்து வளைந்த சிவப்பு மூக்கை நீட்டிய படி அந்த பொந்து கிளி அமர்ந்திருந்தது அதையே பார்த்தான், அவன் மனம் வேகமாக யோசித்தது இன்று எப்படியாவது அந்த மாடிவீட்டு “சீத்தாவை” அடைந்து விட வேண்டும். 
இன்று உடன் வரும் கந்தன் யாரோ அவன் சொந்த காரங்க அழகர் கோவில்லே கடா வெட்டு வச்சு இருக்கங்கலாம் அதுக்கு அவன் குடும்பத்தோட போறானம்.. என்னை லீவு சொல்ல சொல்லிட்டான். இது தான் சான்ஸ் என்று அவன் நினைக்கும் போதே, அவன் அம்மாவின் குரல் அவன் காதில் கேட்டது “ஏண்டா எளந்தாரி பய!.. உனக்கு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் அம்மி மேல உட்காரதே, உட்காரதேனுட்டு.. ஆகாதுடா போய் அந்த கட்டில்ல உட்காரு”, என்றாள். 

அவன் எழுந்து கயித்து கட்டிலில் உட்கார்ந்தான் இவன் எழுந்து போகும் போதே அந்த கிளி “கீ” என்று கத்தி விருட் என்று பறந்து சென்றது. அம்மா அவனிடம் தோசை நிரம்பிய அலுமினிய தட்டை நீட்டினாள் கையில் வாங்கிய அவன், “என்னம்மா நேத்து வச்ச குலம்பு தானா என்றான்”, “ம்.. இப்ப இருக்குறே வேலையிலே, எங்க கல்லை வைத்து தேங்கா அரைக்கிறது இருக்கிறதே சாப்பிட்டு கிளம்பு, “காளை” நேரமாச்சு”, என்றாள்.

அம்மாவை முறைத்த படியே தோசையை சாப்பிட ஆரம்பித்தான் மீண்டும் மனதிற்குள் சீத்தாவின் நினைப்பு வந்தது. சில நாட்களாக இவனும் கந்தனும் போகும் போதும் இவன் மட்டும் அவனுக்கு தெரியாமல் அந்த மாடி வீட்டு  சீத்தாவை பார்த்து கரெக்ட் பண்ணி வைத்திருந்தான். போகும் போதும் வரும் போதும் இவன் கண்கள் சீத்தாவின் மீதே இருந்தது. 

வேக வேகமாக சாப்பிட்டு கட்டிலுக்கு அடியில் தட்டை வைத்து விட்டு, எழுந்து, இரண்டு எட்டு வைத்து அருகில் உள்ள தொட்டியில் கையை முக்கினான். அவன் அம்மா அதை பார்த்து “டேய், டேய்” என கத்தும் போதே முக்கிய கையை பேன்ட் பாக்கெட் உள்ளே செருகி ஒரு துடை துடைத்து, புத்தக கவரை எடுத்து மார்பில் அனைத்து, “வர்ரேம்மா” என்று குரல் கொடுத்து வேகமாய் நடந்தான்.

வரப்பில் நடந்து சரளை சாலையை அடையும் போது மனம் படபடவென அடித்தது, “கரும்பாயி அம்மா இன்னும் சீத்தா அங்கு இருக்கணும்”, என்று வேண்டி கொண்டான். சரளை சாலை முடிந்து முட்டிய ரேழி வாரவதியும் உடன் தார் சாலையும் வந்தது. தார் சாலையில் திரும்பி உடன் அவன் பார்வை மாடி வீட்டை பார்த்தது, அவன் கண்கள் சீத்தாவை தேடியது... தேடிய கண்களில் சிக்கிய சீத்தாவின் உருவத்தில் அவன் மனம் மயங்கியது 

அவ்வளவுதான் அக்கம் பக்கம் பார்த்தான் ஒருவர் வண்டி மாட்டை கையில் பிடித்து வருவது தெரிந்தது, அதை பார்த்தவுடன் அவர் வருவதற்குள் நினத்ததை முடிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் புத்கக பையை வராவதியில் வைத்து விட்டு, வேகமாய் முன்னேறி அந்த வீட்டின் கேட்டை தாண்டி, கையை தூக்கி ஒரு குதி குதித்து சீத்தாவை தொட்டான்.

குதிக்கும் பொது மேலே போன கால்கள் கீழே வரும் போது “பின்ன” அந்த தார் சாலையில் குப்புற விழுந்தான். மாடு பிடித்து வந்தவர் “டே, டே காளை.. என்ன ஆச்சு?” என்றவாறே ஓடி வந்து அவனை தூக்கி நிறுத்தினார் கீழே விழுந்ததில் “சிராய்ந்த முழங்கையும்” அதில் “வேர்க்கும் இரத்ததை”, அழுகை பொங்கும் கண்களுடன் பார்த்த “அவன்” மீண்டும் சீத்தாவின் நினைப்பு வர அந்த சீத்தா மரத்தை நிமிர்ந்து பார்த்தான் இவன் கைபட்ட வேகத்தில் அந்த  சீத்தா பழம்  இவன் அருகே ரேழியில் விழுந்து கிடந்தது.  

                                                    ----ஆக்கம்--V P திரு

பின் குறிப்பு: சில வேலைகள் காரணமாய் தொடர் இன்னும் ஓரிரு நாட்களில் ..,

Saturday 4 January 2014

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 6



ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 6


ராமனுக்கான அனுமனின் "தேடல்" சீதையை பார்த்தவுடன் முடிவுக்கு வருகிறது.

சீதையை ராமனின் மறு வடிவமாகவே அனுமன் பார்த்திருக்க வேண்டும். அவளை கையோடு அழைத்து சென்று ராமனிடம் அன்பின் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்று அனுமனின் மனம் துடித்திருக்க வேண்டும்.  
                 
ஆனால், சீதையின் நிலையோ.., தூக்கிட்டு வந்தும் பலவந்த படுத்தாமல், பல நாட்களாக அவளின் சம்மததிற்கு காத்திருக்கும் அந்நாட்டு "அரசன்", அத்தனை வசதிகள் செய்து கொடுத்து அவளின் அன்பிற்கு ஏங்கி கிடக்கிறான். அவள் அனுமதியில்லாமல் அவளை தொடுவதில்லை என்று விரதமிருக்கிறான்.

அந்தப்பக்கம், அவள் காதலித்து கைபிடித்த கணவனின் நிலைமை தெரியவில்லை, கணவன் இவளை தேடுகிறானோ!, அல்லது ஏதாவது வனவிலங்கு அதன் பசிக்கு அவளை தூக்கி கொண்டு போயிருக்கலாம் என எண்ணி மனம் பேதலித்து அலைகிறானோ!!, அல்லது இவளை கண்டு பிடிக்க தீவிர முயற்சியில் இருக்கிறானோ!!! என்ற குழப்பம் எல்லாம் அவளுக்கு இல்லை. 

பொதுவான பெண்களின் பிடிவாத குணம் போல் அவன் வருவான், இவனை வெல்வான், என்னை மீட்பான்,. என நம்பிக்கையுடன் அவள் வாழ்ந்தாள். அவள் அவன் கணவனின் மீது வைத்த "நம்பிக்கை" இப்போது மெய்யானது.

கணவனின் தூதுவன் அவள் முன்னாள் நிற்கிறான் பெண்களுக்கே உரிய "கூரிய அறிவு" அவளுக்கும் வேலை செய்து இருக்க வேண்டும். தூதுவனின் "பலமும்" அவன் "எண்ணமும்" புரிந்ததால், "உன் கூடவே நான் கிளம்பி வந்தால் அது என் கணவனுக்கு இழுக்கு" என்று சொல்லியிருக்க வேண்டும் அது மட்டு அல்ல, இதில் இன்னும்  ஒன்றும்  உள்ளது அது "போ, போய் ராமனை வர சொல் "நான்" இங்கு தான் இருக்கிறேன், என்னை "தூக்கி வந்தவனும்" இங்கு தான் இருக்கிறான், அவனை வென்று என்னை மீட்க சொல்" என்ற "ஆணை" தான் அது.

ராமனுக்கு அவள் மனைவி இருக்கும் இடம் "அனுமானால்" தெரிந்தது ராமனுக்கு ஏற்கனவே தான் உருவாக்கின சேனையாலும் அது தரும் வெற்றியாலும், அவனுக்கு "உச்சகட்ட வெற்றி மனநிலை" வேலை செய்திருக்க வேண்டும்..அந்த மனநிலையில் அவனுக்கு "கடல்" கூட பெரியதாக தோன்றியிருக்க முடியாது. ஆகவே கடலில் பாலம் அமைப்போம் என்று தோன்றியிருக்க வேண்டும்.

சாதாரணமான மன நிலையில் "சாதகம், பாதகம்" பார்த்தால் யாருக்கும் இப்படி தோன வாய்ப்பில்லை, ஆனால் ராமனின் நிலையில் அவனுக்கு அப்படி தோனியது "எதார்த்தம்தான்". பிரமிக்க தக்க இந்த முயற்சிக்கு அவன் கூட இருந்த அனைவரும் அவனுக்கு ஒத்துழைத்தது, அவன் மீது இருந்த "அன்பு" தான் காரணமாக இருக்க வேண்டும் கூடவே அனைத்தும் ராமனால் முடியும் என்ற நினைப்பும் காரணமாய் இருந்திருக்கலாம்.

இங்கு ஆழமாய் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. அது, ஒரு அணிலும் கல்லை கொண்டு வந்து ராமன் பாலம் கட்ட கொடுத்தது, அதை பார்த்து மகிழ்ந்த ராமன் அதன் முதுகை தடவி கொடுத்தான். அப்போது ராமனின் விரல்கள் அணிலின் முதுகில் மூன்று கோடுகளாக பதிந்தது, அது இன்று வரைக்கும் அணிலின் முதுகில் உள்ளது. என்று ஒரு கதையும் உண்டு.   

இது முழுக்க முழுக்க புனைய பட்ட ஒன்றகாதான் இருக்கவேண்டும். ஆனால், இதை கொஞ்சம் "யோசியுங்கள்" அணில் ஒரு கல்லை எடுத்து வந்தால் அது எவ்வளவு பெரிதாக இருக்கும்?, அந்த கல் பாலம் கட்ட எந்த விதத்தில் உதவும்?, மொத்தமாகவே இது "வெட்டி வேலை", அப்புறம் எதுக்கு இந்த கதையை இங்கு புனைய வேண்டும்? எதற்காக என்றால் ராமனின் அப்போதைய மனநிலையில் அவனிடம் யார் வந்தாலும் அது வெட்டியாகவோ அல்லது தலை போகும் காரியாமாக இருந்தாலும் தன் "அன்பை" அவர்கள் மீது பொழிந்து இருந்திருக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் "அன்பு" என்ற பலமான கூர்மையான ஆயுதத்தை ராமன் கண்ணை மூடி கொண்டு அவன் தீவிரமாக மற்றவர்கள் மீது உபயோக படுத்தி இருக்க வேண்டும்.

இன்று பல "குடும்பங்கள்" மற்றும் "கார்பரேட் நிறுவனங்கள்" முன்னேறாமலும் காணாமல் போவதற்க்கும் ராமனின் “ஒரு வெற்றி அதை தொடர்ந்து அன்பு” என்ற இந்த வித்தை தெரியாமல் போனதே காரணம். "குடும்பத்திற்கு பின்னே பணம் மற்றும் சுகம்” என்ற குடும்பங்களும், “தொழிலாளர்களுக்கு பின்னே கஸ்டமர்” என்ற நிறுவனங்களும் இது வரை தோற்றது இல்லை.

சற்று கண்ணை மூடி உங்களுக்கு தெரிந்த குடும்பங்களையும், நிறுவனங்களையும் நினைத்து பாருங்கள் உண்மை புரியும்.    

-- தொடரும் 

   

Thursday 2 January 2014

“வலைச்சர குழு”விற்கும், “தமிழ்வாசி பிரகாஷ்” அவர்களுக்கும் நன்றி!



“வலைச்சர குழு”விற்கும், “தமிழ்வாசி பிரகாஷ்” அவர்களுக்கும் நன்றி!


மகிழ்ச்சியில் "வாய்" பேச முடியவில்லை! "கை" தட்டச்சு செய்ய முடியவில்லை!! நன்றிகள்! பல.....!!

            
 
 

"பூரியம்" வலைப்பூவை அறிமுகப்படுத்திய "தமிழ்வாசி பிரகாஷ்" அவர்களுக்கும், “வலைச்சர குழு"விற்கும், அறிமுகப்படுத்தப்பட்டதை என் வலைப்பூவிற்கு வருகை தந்து தெரிவித்த திண்டுக்கல் தனபாலன்அவர்களுக்கும், வலைச்சரம் வழியே என் வலைப்பூவிற்கு வந்து வாழ்த்திய "அப்பாதுரை" மற்றும் "தனிமரம்" அவர்களுக்கும் நன்றிகள்.... பல கோடிகள்!!!