Powered By Blogger
Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

Saturday, 4 January 2014

ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 6



ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்- ஒரு உளவியல் பார்வை - 6


ராமனுக்கான அனுமனின் "தேடல்" சீதையை பார்த்தவுடன் முடிவுக்கு வருகிறது.

சீதையை ராமனின் மறு வடிவமாகவே அனுமன் பார்த்திருக்க வேண்டும். அவளை கையோடு அழைத்து சென்று ராமனிடம் அன்பின் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்று அனுமனின் மனம் துடித்திருக்க வேண்டும்.  
                 
ஆனால், சீதையின் நிலையோ.., தூக்கிட்டு வந்தும் பலவந்த படுத்தாமல், பல நாட்களாக அவளின் சம்மததிற்கு காத்திருக்கும் அந்நாட்டு "அரசன்", அத்தனை வசதிகள் செய்து கொடுத்து அவளின் அன்பிற்கு ஏங்கி கிடக்கிறான். அவள் அனுமதியில்லாமல் அவளை தொடுவதில்லை என்று விரதமிருக்கிறான்.

அந்தப்பக்கம், அவள் காதலித்து கைபிடித்த கணவனின் நிலைமை தெரியவில்லை, கணவன் இவளை தேடுகிறானோ!, அல்லது ஏதாவது வனவிலங்கு அதன் பசிக்கு அவளை தூக்கி கொண்டு போயிருக்கலாம் என எண்ணி மனம் பேதலித்து அலைகிறானோ!!, அல்லது இவளை கண்டு பிடிக்க தீவிர முயற்சியில் இருக்கிறானோ!!! என்ற குழப்பம் எல்லாம் அவளுக்கு இல்லை. 

பொதுவான பெண்களின் பிடிவாத குணம் போல் அவன் வருவான், இவனை வெல்வான், என்னை மீட்பான்,. என நம்பிக்கையுடன் அவள் வாழ்ந்தாள். அவள் அவன் கணவனின் மீது வைத்த "நம்பிக்கை" இப்போது மெய்யானது.

கணவனின் தூதுவன் அவள் முன்னாள் நிற்கிறான் பெண்களுக்கே உரிய "கூரிய அறிவு" அவளுக்கும் வேலை செய்து இருக்க வேண்டும். தூதுவனின் "பலமும்" அவன் "எண்ணமும்" புரிந்ததால், "உன் கூடவே நான் கிளம்பி வந்தால் அது என் கணவனுக்கு இழுக்கு" என்று சொல்லியிருக்க வேண்டும் அது மட்டு அல்ல, இதில் இன்னும்  ஒன்றும்  உள்ளது அது "போ, போய் ராமனை வர சொல் "நான்" இங்கு தான் இருக்கிறேன், என்னை "தூக்கி வந்தவனும்" இங்கு தான் இருக்கிறான், அவனை வென்று என்னை மீட்க சொல்" என்ற "ஆணை" தான் அது.

ராமனுக்கு அவள் மனைவி இருக்கும் இடம் "அனுமானால்" தெரிந்தது ராமனுக்கு ஏற்கனவே தான் உருவாக்கின சேனையாலும் அது தரும் வெற்றியாலும், அவனுக்கு "உச்சகட்ட வெற்றி மனநிலை" வேலை செய்திருக்க வேண்டும்..அந்த மனநிலையில் அவனுக்கு "கடல்" கூட பெரியதாக தோன்றியிருக்க முடியாது. ஆகவே கடலில் பாலம் அமைப்போம் என்று தோன்றியிருக்க வேண்டும்.

சாதாரணமான மன நிலையில் "சாதகம், பாதகம்" பார்த்தால் யாருக்கும் இப்படி தோன வாய்ப்பில்லை, ஆனால் ராமனின் நிலையில் அவனுக்கு அப்படி தோனியது "எதார்த்தம்தான்". பிரமிக்க தக்க இந்த முயற்சிக்கு அவன் கூட இருந்த அனைவரும் அவனுக்கு ஒத்துழைத்தது, அவன் மீது இருந்த "அன்பு" தான் காரணமாக இருக்க வேண்டும் கூடவே அனைத்தும் ராமனால் முடியும் என்ற நினைப்பும் காரணமாய் இருந்திருக்கலாம்.

இங்கு ஆழமாய் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. அது, ஒரு அணிலும் கல்லை கொண்டு வந்து ராமன் பாலம் கட்ட கொடுத்தது, அதை பார்த்து மகிழ்ந்த ராமன் அதன் முதுகை தடவி கொடுத்தான். அப்போது ராமனின் விரல்கள் அணிலின் முதுகில் மூன்று கோடுகளாக பதிந்தது, அது இன்று வரைக்கும் அணிலின் முதுகில் உள்ளது. என்று ஒரு கதையும் உண்டு.   

இது முழுக்க முழுக்க புனைய பட்ட ஒன்றகாதான் இருக்கவேண்டும். ஆனால், இதை கொஞ்சம் "யோசியுங்கள்" அணில் ஒரு கல்லை எடுத்து வந்தால் அது எவ்வளவு பெரிதாக இருக்கும்?, அந்த கல் பாலம் கட்ட எந்த விதத்தில் உதவும்?, மொத்தமாகவே இது "வெட்டி வேலை", அப்புறம் எதுக்கு இந்த கதையை இங்கு புனைய வேண்டும்? எதற்காக என்றால் ராமனின் அப்போதைய மனநிலையில் அவனிடம் யார் வந்தாலும் அது வெட்டியாகவோ அல்லது தலை போகும் காரியாமாக இருந்தாலும் தன் "அன்பை" அவர்கள் மீது பொழிந்து இருந்திருக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் "அன்பு" என்ற பலமான கூர்மையான ஆயுதத்தை ராமன் கண்ணை மூடி கொண்டு அவன் தீவிரமாக மற்றவர்கள் மீது உபயோக படுத்தி இருக்க வேண்டும்.

இன்று பல "குடும்பங்கள்" மற்றும் "கார்பரேட் நிறுவனங்கள்" முன்னேறாமலும் காணாமல் போவதற்க்கும் ராமனின் “ஒரு வெற்றி அதை தொடர்ந்து அன்பு” என்ற இந்த வித்தை தெரியாமல் போனதே காரணம். "குடும்பத்திற்கு பின்னே பணம் மற்றும் சுகம்” என்ற குடும்பங்களும், “தொழிலாளர்களுக்கு பின்னே கஸ்டமர்” என்ற நிறுவனங்களும் இது வரை தோற்றது இல்லை.

சற்று கண்ணை மூடி உங்களுக்கு தெரிந்த குடும்பங்களையும், நிறுவனங்களையும் நினைத்து பாருங்கள் உண்மை புரியும்.    

-- தொடரும் 

   

Tuesday, 31 December 2013

புத்தாண்டும் “நாற்பத்தியெட்டு” கேள்விகளும் அதன் பதில்களும் மற்றும் வாழ்த்துகளும்....!

புத்தாண்டும் “நாற்பத்தியெட்டு” கேள்விகளும் அதன் பதில்களும் மற்றும் வாழ்த்துகளும்....! 

பூமிபந்து "சுழன்று", "உருண்டு" தன் காலத்தின் ஒரு இன்னிங்சை முடித்து மீண்டும் அடுத்த இன்னிங்சை சூரியனின் இசைவுவுடன் தொடங்க இருக்கும்,- இந்நாளில். கடந்த வருடத்தின் "கடந்து" வந்த நினைவுகளுடன் ஒவ்வொருவரும், "சுழன்றும்", "உருண்டும்" கொண்டிருக்கும் பூமியை பற்றி பூமியுடன் இயைந்து அவரவர், அவர்களின் "வெற்றிகனியை" சுவைக்க வாழ்த்துகள்.
        
                  

எங்கு இருந்து "எடுத்தேன்" என்று நினைவில்லை, எந்த "தத்துவத்தின் விளக்கம்" என்றும் தெரியவில்லை ஆனாலும் என் "டேட்டா பேசில்" இருந்து புத்தாண்டு தினத்தில் நினைவுகூற "நாற்பத்தியெட்டு" கேள்விகளும் அதன் பதில்களும் ..,

  
  1. பூமியைவிட கனமானது எது?-----------தாயன்பு.
  2. ஆகாயத்தைவிட உயர்ந்தது எது?-----------தந்தையன்பு.
  3. காற்றைவிட வேகமானது?-------------------மனம்.
  4. புற்களைவிட அதிகமானது?-----------------கவலை.
  5. தூங்கும்பொழுதும் எது கண்களை மூடாது?-------------------மீன்
  6. பிறந்ததும் அசையாதது?--------------------முட்டை.
  7. இதயம் இல்லாதது?--------------கல்.
  8. வேகத்தால் வளர்வது?---------------நதி.
  9. நாடு கடந்து செல்பவனுக்கு யார் நண்பன்?-------வித்தை.
  10. வீட்டிலிருப்பவனுக்கு உற்ற தோழன்?-----------------மனைவி.
  11. நோயாளிக்கு யார் தோழன்?-------------------மருத்துவன்.
  12. மரணமடைகின்றவனுக்கு யார் தோழன்?-----------------தானம்.
  13. அனைத்து உயிர்களுக்கும் யார் விருந்தினர்?-----------அக்னி.
  14. எது அமிர்தம்?---------------------பால்.
  15. யார் அனைவருக்கும் ஒருவனாகத் தோன்றுகிறான்?-----------சூரியன்.
  16. பிறந்தவன் எவன் மறுபடியும் பிறக்கிறான்?--------------------------சந்திரன்.
  17. பனிக்கு மருந்து?------------------------அக்னி
  18. அனைத்தையும் அடக்கக்கூடிய பாத்திரம்?-----------------------பூமி.
  19. தருமம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?--------------------முயற்சியில்.
  20. புகழ் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?---------------------தானத்தில்.
  21. சுகம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?--------------------நல்லொழுக்கத்தில்.
  22. சொர்க்கம் எதில், முக்கியமான இடம் பெறுகிறது?---------------சத்தியத்தில்.
  23. மனிதனுக்கு ஆன்மா எது?--------------------------புதல்வன்.
  24. தெய்வம் தந்த துணை?----------------------மனைவி.
  25. மனிதனுக்கு முக்கியமான செயல் என்ன? --------- தர்மம்.
  26. செல்வத்தைக் கொடுப்பவற்றுள் முக்கியமானது எது?-----------சாமர்த்தியம்.
  27. பொருள்களில் எது உத்தமனானது? ------------------கலையறிவு.
  28. லாபங்களில் எது உத்தமனானது?----------------- நோயின்மை.
  29. சுகங்களில் எது உத்தமனானது? ------------------ திருப்தி
  30. உலகத்தில் சிறந்த தருமம் எது?-------------------- அகிம்சை.
  31. எதை அடக்கினால் துயரம் அடையார்? -------------- மனதை.
  32. யாருடன் ஏற்படும் நட்பு குறைவதில்லை?--------------- துறவிகளுடன்
  33. எதை விட்டால் துயரத்தை அடைவதில்லை?-------------------கோபத்தை
  34. எதை விட்டால் பொருள் உள்ளவனாகின்றான்?----------------காமத்தை.
  35. எதை விட்டால் சுகவாசியாகின்றான்? ----------------கஞ்சத்தை.
  36. எதற்காக வேலைக்காரனிடம் தருவது? ------------வசப்படுத்துவதற்காக.
  37. எதற்காக ஆள்பவனிடம் தருவது?--------------பயம் நீங்குவதற்காக.
  38. எதனால் உலகம் இருண்டுள்ளது?-----------------அறியாமையால்
  39. எதனால் மனிதன் சொர்க்கத்தை அடைவதில்லை? ----------- பற்று நீங்காததால்.
  40. எதனால் மனிதன் நண்பர்களை விடுகின்றான்? -------------- கஞ்சத்தனத்தால்
  41. மனிதன் எவ்வாறானால் மாண்டவனாகிறன்?------------வறுமையடைந்தால்
  42. நாடு எப்பொழுது உயிரற்றதாகிறது? -------------- ஆள்பவன் இல்லாதிற்கும்பொழுது
  43. எது நீர்? -------------ஆகாயம்
  44. எது விஷம்?-------------பெரியோர்களிடம் அபகரிக்கப்பட்ட பொருள்
  45. எது தவம்?-------------------தர்மம் செய்வது.
  46. எது தர்மம்? ----------------மனதை அடக்குதல்.
  47. எது சிறந்த பொறுமை? --------------- சுக துக்கங்களை பொறுத்துக் கொண்டிருத்தல்.
  48. எது ஞானம்? ------------- உண்மைப் பொருளை நன்கு அறிதலே ஞானம்.